சொல்ல வார்த்தைகள் இல்லை.! கணவர் சுந்தர். சியின் 30 ஆண்டு சினிமா பயணம் குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ!
இதுதான் முதல் முறை!! முதல் தடவை இப்படி ஒரு சக்தியை கையில் எடுத்த இந்தியா!! வெற்றி நமக்குத்தான்!!

காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வைத் தொடர்ந்து, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற குறியீட்டில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் எல்லை ஓரங்களில் உள்ள கிராமங்களை நோக்கி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 16 பேர் வரை உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளை நோக்கி ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.
இந்த அனைத்து தாக்குதல்களையும் இந்திய ராணுவம் திறமையாக முறியடித்துள்ளது. இந்த விவரங்களை வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். இந்த முறை, இந்தியா தனது S-400 வான் பாதுகாப்பு அமைப்பை முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
S-400 பாதுகாப்பு அமைப்பின் சிறப்பம்சங்கள்:
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெற்ற S-400 வான் பாதுகாப்பு அமைப்பானது உலகிலேயே மிகவும் மேம்பட்ட வான்வழி பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். இதன் சக்திவாய்ந்த ரேடார் அமைப்பு மூலம் 600 கி.மீ வரம்புக்குள் 300 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும்.
இந்தியாவிடம் மட்டுமே ஆசியா முழுவதும் S-400 உள்ளது. இந்த அமைப்பில் உள்ள சுதர்சன் சக்ரா ஏவுகணை 40 கி.மீ முதல் 400 கி.மீ வரையிலான இலக்குகளை அழிக்க முடியும். மேலும், 100 அடி முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும் விமானங்கள் மற்றும் டிரோன்களையும் துல்லியமாக அடிக்க முடியும்.