ஒருதலைக் காதல் விவகாரம்.. காதல் ஜோடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்!

ஒருதலைக் காதல் விவகாரம்.. காதல் ஜோடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்!



one-side-love-lovers-killed-in-madhya-pradesh

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் அருகே உள்ள கிராமப் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் யாதவ். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த சினேகா என்ற இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், சினேகா அபிஷேக்கின் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் அபிஷேக் தொடர்ந்து சினேகாவை காதலித்து வந்துள்ளார்.

one side love

இதனிடையே சினேகா அதே கல்லூரியில் படிக்கும் தனது உறவினரான தீபக் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அபிஷேக் தான் நேசித்த காதலி வேறு ஒருவரை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சினேகாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை சினேகாவும், தீபக்கும் கோயிலுக்கு சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற அபிஷேக், திடீரென அவர்களை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சினேகாவும், தீபக்கும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

one side love

இதனையடுத்து அபிஷேக் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 3 நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.