அடக்கடவுளே... என்னடா இப்படி ஆச்சு... கோயிலில் சடங்கை கடைப்பிடிக்க நினைத்த நபருக்கு நிகழ்ந்த விபரீதம்...
அடக்கடவுளே... என்னடா இப்படி ஆச்சு... கோயிலில் சடங்கை கடைப்பிடிக்க நினைத்த நபருக்கு நிகழ்ந்த விபரீதம்...
குஜராத்தில் கோவில் ஒன்றில் உள்ள யானை சிலைக்கு அடியில் வழிபாடு செய்ய சென்ற இளைஞர் அந்த சிலைக்கு அடியிலேயே மாட்டி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுவாக கோவிலில் சில சடங்குகளை மக்கள் கடைப்பிடித்து வருவது வழக்கம் தான். அந்த வகையில் குஜராத்தில் உள்ள கோவில் ஒன்றில் அமைந்துள்ள யானை சிலைக்கு அடியில் சென்று இளைஞர் ஒருவர் வழிபாடு செய்துள்ளார். வழிபாடுகளை முடித்து விட்டு மீண்டும் வெளியே வர முயன்றுள்ளார்.
ஆனால் அந்த இளைஞரால் வெளியே வரமுடியாமல் போயுள்ளது. அந்த இளைஞர் யானை சிலைக்கு அடியில் மாட்டி கொண்டு வெளியே வரமுடியாமல் தவிப்பதை பார்த்த சக பக்தர்கள் மற்றும் பூசாரி உதவியும் அந்த இளைஞர் மீட்கப்பட்டார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.