பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை சிரஞ்சில் பூச்சிக்கொல்லி மருந்து ஏற்றி கொலை; தந்தை வெறிச்செயல்.!



Odisha Man Killed his Own Son due to Affair Doubt On Wife 

தாய் மீதான சந்தேகத்தால் குழந்தை கொலை செய்யப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் பகுதியை சேர்ந்தவர் சாந்தனு. இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். திருமணமானதில் இருந்து மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து இருக்கிறார். 

இதனால் பலமுறை மனைவியிடம் சண்டையிட்டு வந்த நிலையில், சாந்தனுவின் மனைவி கர்ப்பமாகி, கடந்த 20 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. 

odisha

மனைவியின் மீது தொடர் சந்தேகத்தில் இருந்த சாந்தனு, குழந்தை வேறொருவருக்கு பிறந்திருக்கலாம் என எண்ணி தனது குழந்தையை கொலை செய்துள்ளார். 

குழந்தைக்கு சிரஞ்சில் பூச்சிக்கொல்லி மருந்து ஏற்றி கயவன் கொலை செய்துள்ளான். இந்த விசயம் தொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர் சாந்தனுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.