என்னை உடனே பார்க்க வா.... காதலன் கணவனுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ்! பாசமா இல்ல.. புரிதல் இல்லாத அவசரமா..? புதுமணப் பெண்ணின் விபரீத செயல்..!!!



newlywed-woman-dies-by-suicide-near-bengaluru

பெங்களூரு அருகே காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட 31 வயது பெண், கணவர் உடனடியாக தன்னைச் சந்திக்க வராததால் ஏற்பட்ட மன உளைச்சலில் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணத்துக்குப் பிறகு தனியாக வசித்த இளம்பெண்

தனுஜா மற்றும் ரவீந்திரா ஆகியோர் வேலைக்குச் செல்லும் வழியில் அறிமுகமாகி, பின்னர் காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. திருமண விஷயத்தை தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக ரவீந்திரா கூறியதால், தனுஜா தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்! ஆறு மாசமா லிவ்-இன் உறவு.... நாடுராத்திரியில் நடந்த விபரீதம்! வக்கீல் கொடுத்த ரகசியப் புகாரால் வெளியான பகீர் உண்மைகள்..!!!

கணவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி

சம்பவத்தன்று, தன்னை வீட்டிற்கு வருமாறு தனுஜா கணவரை அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு, பெற்றோர் வீட்டில் இருப்பதால் உடனடியாக வர முடியாது என்றும், மறுநாள் காலை சந்திப்பதாகவும் ரவீந்திரா தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து மனவேதனையில் இருந்த தனுஜா, தனது மொபைல் போனை அணைத்துவிட்டு, சிறிது நேரத்தில் “நான் விஷம் குடித்துவிட்டேன்” என்று ரவீந்திராவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மருத்துவமனையில் உயிரிழப்பு... போலீஸ் விசாரணை

குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ரவீந்திரா உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று தனுஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். உயிரிழப்புக்கான முழு காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்கள்! நள்ளிரவில் மாமனாருக்கு வயகரா மாத்திரை கொடுத்து மருமகள்கள் செய்த காரியம்..... கடைசியில் நடந்த பயங்கரம்!!!