தலைநகரில் மீண்டும் பயங்கரம்.. 2 வயது பச்சிளம் பிஞ்சு பாலியல் பலாத்காரம்.. உயிருக்கு போராடும் துயரம்.. அலட்சியத்தில் காவல்துறை.!



New Delhi Usmanpur 2 Aged Girl Raped

 

புதுடெல்லியில் உள்ள உஸ்மான்பூர் பகுதியை சேர்ந்த நபருக்கு, மனைவி மற்றும் 2 வயதுடைய குழந்தை இருக்கின்றனர். 

சம்பவத்தன்று வீட்டின் வெளியே இருந்த சிறுமியை, ராகுல் சிங் என்பவன் கடத்தி சென்றுள்ளார். கடத்தி செல்லப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

கடத்தி செல்லப்பட்ட சிறுமி தனது வீட்டு வாசலில் இருந்து படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அவர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் தற்போது வரை விசாரணையை தொடங்கவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் மனம் நொந்துபோன சிறுமியின் தந்தை, ஊடகங்களுக்கு உண்மையை வெளிச்சப்படுத்தி இருக்கிறார். மேற்படி விசாரணை இனி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.