நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு.! திறந்து வைக்கிறார் பாரத பிரதமர் மோடி.!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு.! திறந்து வைக்கிறார் பாரத பிரதமர் மோடி.!



new building for mp

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். புதுடெல்லியில் உள்ள டாக்டர் பி.டி. மார்க் என்னும் இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 76  அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 

சாம்பல் மற்றும் கட்டுமானக் கழிவுகளிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள், வெப்பத்தில் இருந்து காக்கும் மற்றும் எரிசக்தியை சேமிக்கும் சிறப்பு ஜன்னல்கள், எல்இடி விளக்குகள், குறைந்த எரிசக்தியில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், தண்ணீரை சேமிப்பதற்கான வசதிகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கூரையில் சூரிய ஒளி சக்தி கருவி போன்றவை பொருத்தப்பட்ட பசுமைக் கட்டிடமாக இது விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை இன்று (23-ம் தேதி) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.