விநாயகருக்கு கோவில் கட்டி பூஜை நடத்தும் இஸ்லாமியர்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா! நெகிழ்ச்சி சம்பவம்!!

விநாயகருக்கு கோவில் கட்டி பூஜை நடத்தும் இஸ்லாமியர்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா! நெகிழ்ச்சி சம்பவம்!!



muslim-man-build-temple-for-vinayagar

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப், ஹலால் உணவுக்கு எதிர்ப்பு என அடுக்கடுக்காக பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இஸ்லாமியர் ஒருவர் விநாயகருக்கு கோவில் கட்டி பூஜை நடத்திவரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சிக்கஒலே மற்றும் சுவர்ணாவதி அணைகட்டுகள் அமைந்துள்ளது. அங்கு அணை மதகுகளை திறக்கும் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரகுமான்.  இந்நிலையில் சிக்கஒலே அணைப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை மர்மநபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது. 

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த ரகுமான் தனது சொந்த செலவில் விநாயகர் சிலை நிறுவி கோவில் கட்டியுள்ளார். மேலும் அங்கு விநாயகருக்கு பூஜை செய்ய பூசாரியை நியமித்து வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை பூஜை நடத்தப்பட்டுள்ளது. அப்பொழுதெல்லாம் ரகுமான் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார். 

இந்த நிகழ்வு குறித்து ரகுமான், ஒவ்வொரு மதத்தினரும் அவர்களுக்கு பிடித்த விருப்ப தெய்வங்களை வழிபடுகின்றனர். இறைவன் என்பவன் ஒருவனே. அனைவருக்கும் இரத்தம் சிவப்பு நிறத்தில்தானே ஓடுகிறது என கூறியுள்ளார்.