போலீஸ்க்கு கால் செய்து என்னை கட்டி வைத்து அடிக்கிறாங்க.... எனக் கூறிய 8 வயது சிறுவன்! அடுத்த சில நிமிடத்தில் நடந்த ட்விஸ்ட்... இப்படி ஒரு சம்பவமா?..!!!
மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட் பகுதியில் 8 வயது சிறுவனைச் சுற்றி நடந்த ஒரு சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. குர்குரே வாங்க பணம் கேட்ட சிறுவன், மறுப்பு காரணமாக தாக்குதலுக்குள்ளானான். உடனே அவசர எண்ணிற்கு அழைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தான். பின்னர் போலீசார் வந்து குடும்பத்தினருக்கு எச்சரிக்கை வழங்கினர்.
சிறுவன் மீது தாக்குதல்… உடனடி அழைப்பு
தகவலின்படி, குர்குரே வாங்க 20 ரூபாய் கேட்ட சிறுவனுக்கு தாய் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்து, தாய் மற்றும் சகோதரி சேர்ந்து சிறுவனை கட்டி வைத்து அடித்ததாக தெரிகிறது. இதனால் பயந்து அழுதபடியே, அவன் நேரடியாக police helpline 100 எண்ணிற்கு அழைத்து உதவி கேட்டான்.
போலீசார் தலையிட்டு எச்சரிக்கை
அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் நிலையை கவனித்து, தாயும் சகோதரியும் மீது கண்டனம் தெரிவித்தனர். குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிப்பது சட்டப்படி தவறு என தெளிவுபடுத்தினர். இதையடுத்து சிறுவனை சமாதானப்படுத்த, அவனுக்குப் பிடித்த குர்குரேவையும் வாங்கிக் கொடுத்தனர்.
குழந்தை விழிப்புணர்வு
இந்த நிகழ்வு, இன்றைய குழந்தைகளின் குழந்தை உரிமை பற்றிய விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. 8 வயதிலேயே சட்ட உதவியை நாடும் அளவுக்கு தெளிவு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பெற்றோர் குழந்தைகளிடம் வன்முறையை தவிர்த்து, புரிதலுடன் அணுக வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.