தலையணையை வைத்து அழுத்தி... கள்ள உறவுக்கு இடையூறு... 4 வயது மகளை... தாய் செய்த கொடுமை!



mother-killed-her-four-year-old-daughter-because-she-di

ஹைதராபாத்தில் சேர்ந்த பெண் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நான்கு வயது மகளை கொடூரமாக கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் அந்தப் பெண்மணியை கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணுக்கு திருமணமாகி தன்விதா என்ற நான்கு வயது மகள் இருந்தார். கணவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து  தனது 4 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார் கல்யாணி. இந்நிலையில் அவருக்கும் அவரது உறவுக்காரரான பத்தொன்பது வயது நவீன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது.

Indiaஇருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கு அவரது நான்கு வயது மகள் இடையூறாக இருந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தனது 4 வயது மகளை தலையணையை வைத்து அழுத்தி  கொடூரமாக கொலை செய்திருக்கிறார்  கல்யாணி.

Indiaகுழந்தையை காணவில்லை என்று அந்தப் பெண்மணியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணையில் சிறுமி  கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கல்யாணியை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.