9 வயது சிறுவனை நரபலி கொடுத்து கொலை செய்த சகோதரனும், தாயும்!.
9 வயது சிறுவனை நரபலி கொடுத்து கொலை செய்த சகோதரனும், தாயும்!.
ஒடீஷா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் நதிக்கரை ஒன்றில் இருந்து சிறுவனின் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து போலீஸ் விசாரணையில், காணாமல் போனதாக பெற்றோரால் புகார் அளிக்கப்பட்ட 9 வயது கான்ஷியாம் ராணா என்ற சிறுவனின் தலை என தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதி மக்களை விசாரித்துள்ளனர்.
இதில் சிறுவனின் சகோதரன் சம்பாபன் ராணா அளித்த பதிலில் காவல்துறையியினருக்கு சந்தேகம் ஏற்பட்டது, சிறுவனின் சகோதரன் சம்பாபன் ராணாவிற்கும் அவனது தாய்க்கும் மந்திரவாதத்தில் நாட்டம் கொண்டவர்கள் தெரியவந்தது.
இதனையடுத்து துர்க்கா தேவிக்கு பலியிடும் நோக்கில் சிறுவனை கடத்திச் சென்றதாகவும், பூஜை அன்று சிறுவனை கழுத்தை துண்டித்து பலியிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.