காவு வாங்கிய டிரெட்மில்., 24 வயது இளைஞர் பலி..!!



men-died-by-attacks-of-electric-supply

டெல்லியை சேர்ந்த சக்ஷம் ப்ருதி என்னும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தினமும் ஜிம்மிற்கு போவது வழக்கம். அதேபோல், சம்பவ தினத்தன்று சக்ஷம் ப்ருதி ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

பின்னர், டிரெட்மில்லில் ஏறி ஓடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரெட்மில்லில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இது உடனே டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த  சக்ஷம் ப்ருதி உடலில் பாய்ந்துள்ளது. 

இதனால், நொடியில் தூக்கியெறியப்பட்ட சக்ஷம் ப்ருதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.