இரண்டு நாட்களில் நான்கு மருத்துவர்கள்! பரிதாபமாக உயிர் இழந்த இளைஞர். கதறும் கர்ப்பிணி மனைவி.
இரண்டு நாட்களில் நான்கு மருத்துவர்கள்! பரிதாபமாக உயிர் இழந்த இளைஞர். கதறும் கர்ப்பிணி மனைவி.
கேரளா மாநிலம் எடப்பாள் என்னும் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான பிரசாந்த். கடந்த இரண்டு நாட்களாக நெஞ்சுவலியல் அவதிப்படுவந்த பிரசாந்த் அதற்காக கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். நெஞ்சுவலி சம்மந்தமாக அந்த மருத்துவமனையில் 4 மருத்துவர்களை பார்த்து ஆலோசித்துள்ளார் பிரசாந்த்.
நான்கு மருத்துவர்களும் அணைத்து பரிசோதனையின் முடிவில் நெஞ்சுவலிக்கான வலி நிவாரணியை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பியுள்னனர். தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற நம்பிக்கையுடன் வீட்டிற்கு வந்துள்ளார் பிரசாந்த்.
இந்நிலையில் பிரசாந்தின் பெற்றோர் வெளியூர் சென்றுள்னனர். பிரசாந்தின் மனைவி தலை பிரசவத்திற்காக அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் பிரசாந்த் அவரது சகோதரருடன் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர்களை அணுகிய இரண்டு நாட்களில் மாரடைப்பு காரணமாக பிரசாந்த் உயிர் இழந்துள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக நான்கு மருத்துவர்களை அணுகியும் இறுதியில் பிரசாந்த் உயிர் இழந்தது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.