கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
"என் மனைவி கேக்குதா உனக்கு.." கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்.!! கணவன் எடுத்த கொடூர முடிவு.!!

பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த டெம்போ டிரைவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெம்போ டிரைவரின் கள்ளக்காதல்
டெல்லியைச் சேர்ந்தவர் ரித்திக் வர்மா. இவர் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரித்திக் வர்மாவிற்கு டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார் ரித்திக் வர்மா.
கையும் களவுமாக சிக்கிய காதல் ஜோடி
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்ற ரித்திக் வர்மா அவருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்த காதலியின் கணவர், ரித்திக் வர்மா மற்றும் தனது மனைவியை பிடித்து அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: காம வெறி பிடித்த மாமனார்... ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் படுகொலை.!!
சித்ரவதை செய்து கொலை
மேலும் அந்த நபர் ரித்திக் வர்மாவின் கை கால்களை கட்டி அவரது விரலில் இருந்த நகங்களை பிடுங்கி இருக்கிறார். மேலும் உடலின் பல பகுதிகளிலும் கடுமையாக தாக்கியிருக்கிறார். இதில் படுகாயமடைந்த ரித்திக் வர்மாவை மீட்ட அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் ரித்திக் வர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!