வேன் - கண்டைனர் லாரி மோதி பயங்கர விபத்து; 12 பேர் பரிதாப பலி..!

வேன் - கண்டைனர் லாரி மோதி பயங்கர விபத்து; 12 பேர் பரிதாப பலி..!



Maharashtra Road Accident 12 Died 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒளரங்காபாத் மாவட்டம், ஸம்ருத்தி விரைவு சாலையில் கண்டைனர் லாரி - வேன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்துள்ளனர். 

வைஜாபூர் ஸம்ருத்தி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கோர விபத்து நடந்துள்ளது. வேனில் பயணித்த பலரும் நாசிக் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ம்ருத்தி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து பல விபத்துகள் ஏற்படுகின்றன. பாபா தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது விபத்து நடந்தது உறுதியானது.  

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.