பிறந்தநாளுக்கு துபாய் அழைத்துசெல்லாத கணவன்: ஒரே குத்தில் நாக்கவுட் செய்த மனைவி..! தொழிலதிபர் துள்ளத்துடிக்க பலி.!

பிறந்தநாளுக்கு துபாய் அழைத்துசெல்லாத கணவன்: ஒரே குத்தில் நாக்கவுட் செய்த மனைவி..! தொழிலதிபர் துள்ளத்துடிக்க பலி.!



Maharashtra Pune Wife Killed Husband after Punch Out Nose 

 

நொடிபொழுது ஆத்திரத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக அமைந்துள்ள சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, வானவடி பகுதியை சேர்ந்தவர் நிகில் கண்ணா (வயது 36). இவர் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தொழிலதிபர் ஆவார். இவரின் மனைவி ரேணுகா (வயது 38). 

தம்பதிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இந்நிலையில், மனைவி ரேணுகாவுக்கு தனது பிறந்தநாளை துபாயில் சிறப்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனை காதல் கணவரிடமும் தெரிவித்துள்ளார். ஆனால், நிகிலிடம் தற்போது துபாய் சென்று வர பணம் இல்லை. 

மேலும், துபாய் தான் செல்ல வழியில்லை, டெல்லிக்கு சென்று எனக்கு பிடித்த உறவினர்களுடன் பிறந்தநாளை கொண்டாடலாம் என மனைவி கோரிக்கை வைத்தும் நிறைவேறவில்லை.

இதனால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில் ரேணுகா நிகிலின் முகத்தில் குத்தியுள்ளார். அவரின் ஒரே குத்தில் நிகிலின் மூக்கு மற்றும் பற்கள் உடைந்துள்ளன.

இரத்தமும் தொடர்ந்து வெளியேறி மயங்கி இருக்கிறார். பின் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் சிகிச்சை பலனின்றி சில நிமிடத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ரேணுகாவை கைது செய்தனர்.