120 அடி உயரத்தில் இருந்து குதித்து, நீர்வீழ்ச்சியில் சொருகி இளைஞர் சாவு; ரீல்ஸ் மோகம் உயிர்பறித்த சோகம்.!



Maharashtra Palghar Youth Jump 120 feet Waterfalls died 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டம், டபோசா நீர்வீழ்ச்சி பிரபலமான ஒன்றாகும். நீர்வீழ்ச்சியின் கீழே விழும் நீரில் மக்கள் & சுற்றுலா பயணிகள் குளித்து மகிழவவது வாடிக்கையான ஒன்று. 

120 அடி உயரத்தில் இருந்து குதித்த இளைஞர்:

இந்நிலையில், மீரா ரோடு பகுதியை சேர்ந்த மஜாஸ் சஜித் சைக் என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் 120 அடி உயரமுள்ள அந்நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்று ரீல்ஸ் விடியோவுக்காக மேலே இருந்து கீழே குதித்துள்ளார். 

நீரில் மூழ்கி பரிதாப பலி:

இந்த ஆபத்தான முயற்சியின்போது நீருக்கடியில் சென்று சிக்கிக்கொண்ட ஷைக் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் குதித்த மற்றொரு நண்பர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.