கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!
120 அடி உயரத்தில் இருந்து குதித்து, நீர்வீழ்ச்சியில் சொருகி இளைஞர் சாவு; ரீல்ஸ் மோகம் உயிர்பறித்த சோகம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டம், டபோசா நீர்வீழ்ச்சி பிரபலமான ஒன்றாகும். நீர்வீழ்ச்சியின் கீழே விழும் நீரில் மக்கள் & சுற்றுலா பயணிகள் குளித்து மகிழவவது வாடிக்கையான ஒன்று.
120 அடி உயரத்தில் இருந்து குதித்த இளைஞர்:
இந்நிலையில், மீரா ரோடு பகுதியை சேர்ந்த மஜாஸ் சஜித் சைக் என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் 120 அடி உயரமுள்ள அந்நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்று ரீல்ஸ் விடியோவுக்காக மேலே இருந்து கீழே குதித்துள்ளார்.
நீரில் மூழ்கி பரிதாப பலி:
இந்த ஆபத்தான முயற்சியின்போது நீருக்கடியில் சென்று சிக்கிக்கொண்ட ஷைக் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் குதித்த மற்றொரு நண்பர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
पालघरमधून एक धक्कादायक घटना समोर आली आहे. उत्साहाच्या भरात धबधब्यावरून उडी मारणं पर्यटकाच्या जीवावर बेतलं आहे. याचा एक व्हिडीओ समोर आला आहे. pic.twitter.com/LukjRcHlbV
— News18Lokmat (@News18lokmat) May 6, 2024