கொடூர விபத்து: 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. முந்திச்செல்ல முயன்று நொடியில் சோகம்; 5 பேர் பலி., 20 பேர் படுகாயம்.!



Maharashtra Buldhana 2 Bus Collide 5 Died 20 Injured  


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டம், மால்காபூர் மேம்பாலத்தில் இன்று அமர்நாத் யாத்திரையை முடித்துக்கொண்டு தனியார் பேருந்து பயணம் செய்தது. எதிர்திசையில் புல்தானாவில் இருந்து நாக்பூர் நோக்கி தனியார் பேருந்து பயணம் செய்தது. 

இந்த 2 பேருந்துகளும் மால்காபூர் மேம்பாலத்தில் வந்தபோது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. நாக்பூர் நோக்கி பயணம் செய்த பேருந்து முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை முந்தி செல்ல முற்பட்டுள்ளது.

maharashtra

அப்போது எதிர்திசையில் வந்த பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 02:30 மணியளவில் விபத்து நேர்ந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

தீயணைப்பு படையினர் உதவியுடன் காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.