இறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் தோளில் தூக்கி சென்ற பரிதாபம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

இறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் தோளில் தூக்கி சென்ற பரிதாபம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!



madhyapradesh smaal girl death postmortem issue

விபத்தில் மரணமடைந்த சிறுமியை மயானத்தில் புதைக்க பணமில்லாமல் ஒருவர் தோளிலேயே சொந்த கிராமத்துக்கு தூக்கி சென்ற சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் சந்தர்ப்பூர் மாவட்டத்தில் விபத்தில் மரணமடைந்த தனது சகோதரியின் மகளை மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒருவர் கொண்டு சென்றார். பரிசோதனைக்கு பின் பிணத்தை புதைக்க அரசு மயானத்தை தேடியலைந்த நிலையில், அங்கு எதுவும் கிடைக்காததால் தனியார் மயானத்தில் புதைக்க திட்டமிட்டனர்.

ஆனால் சிறுமியை புதைக்கவோ, வாகனம் வைத்துக்கொண்டு செல்லவோ போதிய வசதி இல்லாத காரணத்தால் அவர் தோளிலேயே தூக்கி சென்று தனது சொந்த கிராமத்திற்கு பேருந்தில் சென்றுள்ளார். மேலும் பேருந்தில் டிக்கெட் எடுக்க பணமில்லாமல் அந்தநபருக்கு சக பயணி ஒருவர் உதவியுள்ளார். 

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த 4 ஆண்களுக்கு முன்னதாக 4 வயது குழந்தையை குடும்பத்தார் தோளில் தூக்கி சென்ற சம்பவம் இணையத்தில் பரவி வந்த நிலையில், மீண்டும் அதே போன்று சம்பவம் அரங்கேறி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.