விலையுயர்ந்த நாயை கொடூரமாக கொலை செய்த பயிற்சி மைய ஊழியர்; அதிரவைக்கும் வீடியோ உள்ளே.!

விலையுயர்ந்த நாயை கொடூரமாக கொலை செய்த பயிற்சி மைய ஊழியர்; அதிரவைக்கும் வீடியோ உள்ளே.!



Madhya Pradesh Bhopal Dog Killed 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பகுதியைச் சார்ந்தவர் நிதிஷ் ஜெய்ஸ்வால். இவர் அங்குள்ள நாய்கள் பயிற்சி மையத்தில், தனது ஆல்ஃபா நாயை பயிற்சிக்காக சேர்த்திருக்கிறார். 

இந்நிலையில், நாய் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், நிர்வாகத்தினர் தெரிவித்த தகவல் அவருக்கு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. 

இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் தனது நாயின் மர்ம மரணம் தொடர்பாக அவர் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

அப்போது, பயிற்சி மையத்தின் அதிர்ச்சி காட்சி ஒன்று அவர்களுக்கு கிடைத்தது. அதாவது பயிற்சி மையத்தைச் சார்ந்த பணியாளர், நாயை உயரமான கதவுகளின் மீது கயிறு கொண்டு இழுத்ததால் நாய் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, நாய் பயிற்சி மையத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடந்து வருகின்றனர்.