தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 1,621 ஆசிரியர்கள் பலி.? உ.பி ஆசிரியர் யூனியன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 1,621 ஆசிரியர்கள் பலி.? உ.பி ஆசிரியர் யூனியன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!



lot-of-teachers-involved-in-panchayat-election-work-die

உத்தரபிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் கடந்த ஏப்ரல் 15, 19, 26, 29 ஆகிய தேதிகளில் மொத்தம் 4 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டன. அங்கு நடந்த பஞ்சாயத்து தேர்தல் பணியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தநிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

up

இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் 1,621 பேர் கொரோனா தாக்குதல் மற்றும் பிற பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக உத்தரபிரதேச ஆரம்ப பள்ளி ஆசிரியர் யூனியன் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் மன அழுத்ததால் உயிரிழந்துள்ளதாக அந்த யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார்.