கதறி கதறி அழுத குட்டி குழந்தை....! அம்மா செய்த செயலால் அடுத்த நொடியே போட்ட குத்தாட்டம்! வைரலாகும் வீடியோ இதோ...
கதறி கதறி அழுத குட்டி குழந்தை....! அம்மா செய்த செயலால் அடுத்த நொடியே போட்ட குத்தாட்டம்! வைரலாகும் வீடியோ இதோ...

அழுதுகொண்டிருந்த குழந்தை திடீரென குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ் பெற்றுவருகிறது.
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டை சொர்க்கம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலைகள் எல்லாம் பறந்து போகும். அவர்களின் சிரிப்பு மற்றும் சேட்டைகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
அதேநேரம் அவர்கள் அடம்பிடித்து ஏதற்காக அழுகிறார்கள் என புரிந்துகொள்வதே மிகவும் சவாலான விசயமாக இருக்கும். இந்த குறிப்பிட்ட வீடியோவில், ஒரு குழந்தை ஒன்று விடாமல் அழுதுகொண்டே இருக்கிறது. குழந்தையின் தாய் குழந்தை அழுவதை உடனடியான நிறுத்த ஒரு பாடல் ஒன்றை ஒலிகின்றார்.
அந்த பாடலை கேட்டு மெய்மறந்த குழந்தை தான் அழுதுகொண்டிருப்பதையே மறந்து ஒரு நொடியில் குத்தாட்டம் ஆடத் தொடங்குகிறது. இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை மெய்பிக்கும் வகையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசையால் மயங்காதார் இதயம் எது...?🎵🎵🎵 pic.twitter.com/5vahNQre8D
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) March 3, 2022