கீர்த்தி சுரேஷின் நாய் என்ன காரியம் செய்து பாருங்க ! அவரே வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரல்...
வயநாடு: 36 மணிநேரத்தில் 190 அடி நீளமுள்ள இரும்பு பாலம் அமைப்பு; மாஸ் காண்பித்த இராணுவம்.!

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலை, அட்டமலை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 333 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோரின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது. 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், 82 க்கும் அதிகமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
36 மணிநேரத்தில் பாலம் அமைப்பு
இந்நிலையில், வயநாடு பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் இந்திய இராணுவத்தினர், சுமார் 36 மணிநேரத்தில் 190 அடி நீளம் கொண்ட தற்காலிக இரும்பு பாலத்தினை அமைத்துள்ளனர். இந்த பாலம் வாயிலாக முண்டகை பகுதிக்கு மீட்பு பணியில் ஈடுபடும் அவசர ஊர்தி வாகனங்கள் எளிதில் சென்று வரலாம்.
இதையும் படிங்க: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு; ரூ.20 இலட்சம் நிதிஉதவி வழங்கிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி.!
பாராட்டுகளை குவிக்கும் செயல்
ஆனால், கனரக வாகனங்கள் செல்ல இயலாது. அதிகபட்சமாக 24 டன் எடையை தாங்கும் வகையில் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் துரித செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன் விடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
केरल के वायनाड में भीषण आपदा के बाद भारतीय सेना ने राहत और बचाव कार्यों की कमान अपने हाथों में ले ली है. गुरुवार को जवानों ने भूस्खलन स्थल के पास एक नदी पर रिकॉर्ड समय में बेली ब्रिज का निर्माण कार्य पूरा कर लिया. सेना ने इस 190 फीट लंबे पुल को महज 16 घंटे में ही बना दिया.… pic.twitter.com/ziU3IEdmV8
— AajTak (@aajtak) August 2, 2024
இதையும் படிங்க: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு; ரூ.20 இலட்சம் நிதிஉதவி வழங்கிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி.!