கைகளில் சீல்..! கண்கள் கிழிந்து, முகம் சிதைந்த நிலையில் திரியும் குரங்கு..! கேரளாவில் நடந்த மற்றொரு பரிதாபம்...!
கைகளில் சீல்..! கண்கள் கிழிந்து, முகம் சிதைந்த நிலையில் திரியும் குரங்கு..! கேரளாவில் நடந்த மற்றொரு பரிதாபம்...!
கேரளாவில் முகம் சிதைந்து, கைகளில் சீல் பிடித்தவாறு திரியும் குரங்கு ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
கேர்ளாவில் சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரப்பப்பட்ட பழத்தை உட்கொண்டபோது வெடிபொருள் வெடித்து யானையின் முகம் சிதைந்து சில நாட்களில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வடு மறைவதற்குள் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் குரங்கு ஒன்று முகம் சிதைந்து, வலது கண் மற்றும் மூக்கு இல்லாத நிலையில், கைகளில் சீல் படிந்தவாறு பரிதாபநிலையில் காணப்படுகிறது. அந்த குரங்கு சாப்பிட்ட உணவு பொருளில் ஏதெனும் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முனங்கா வனப்பகுதி அதிகாரிகள், இது தொடர்பாக ஆய்வு செய்துவருவதாகவும், விரைவில் உண்மையான காரணம் கண்டறியப்படும் எனவும் கூறியுள்ளனர் .