மனைவிகளை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தும் கணவன்கள் - இன்ஸ்டா குழுவை சார்ந்த 7 பேர் பரபரப்பு கைது.!
மனைவிகளை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தும் கணவன்கள் - இன்ஸ்டா குழுவை சார்ந்த 7 பேர் பரபரப்பு கைது.!
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம், கருக்காச்சல் பகுதியை சார்ந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், "எனது கணவர் அவரது நண்பர்களுடன் என்னை உல்லாசமாக இருக்க வற்புறுத்துகிறார். இந்த விஷயத்திற்கு உடன்படாத என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். எனது கணவரின் நண்பர்கள், அவர்களின் மனைவியை பரிமாறிக்கொள்கின்றனர்.
சமூக வலைத்தளத்தில் தனிக்குழு ஒன்றை அமைத்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய காவல் துறையினர், சைபர் கிரைம் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியாக குழு அமைத்து, மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருப்பதில் விருப்பம் கொண்டவர்கள் குழுவாக இணைந்து இருந்தது தெரியவந்தது. மேலும், திருமணம் ஆகாத நபர்கள் இக்குழுவில் இணைத்து உல்லாசமாக இருக்க பணமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கேரளா மட்டுமல்லாது வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள் என 1000 தம்பதிகள் உறுப்பினராக இருந்துள்ள நிலையில், முதற்கட்டமாக குழுவை சார்ந்த 7 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருக்கும் 25 பேரை கண்காணித்து வருகின்றனர். இந்த மாதிரியான செயல்கள் சட்டப்படி குற்றமானதாகும். இவ்வாறு சம்பவம் செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கும் பட்சத்தில், அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.