கிணறு, கால்வாயில் கலந்த அமோனியா; விபத்தால் கடவுள்களின் தேசத்திற்கு வந்த சோகம்.! அச்சத்தில் மக்கள்.!

கிணறு, கால்வாயில் கலந்த அமோனியா; விபத்தால் கடவுள்களின் தேசத்திற்கு வந்த சோகம்.! அச்சத்தில் மக்கள்.!



Kerala Kottayam Amonia on Water when Lorry Met Accident 

 

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில், அமோனியம் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் டேங்கரில் இருந்து அமோனியா 10 கி.மீ தூரம் சென்று குடிநீருக்கு பயன்படுத்தும் கிணற்றில் சேர்ந்துள்ளது. 

வழிநெடுக ஓடைகளில் கலந்த அமோனியா, மீன்களும் செத்து மிதந்துள்ளன. நீரும் பார்ப்பதற்கு வெள்ளை நிறத்துடன் இருக்கிறது. 

இதனால் சுகாதாரத்துறையினர் ஓடை நீரை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.