பச்ச புள்ள உடம்பில் 51 சித்திரவதை காயங்கள்! தாயின் காமவெறிக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை...... கள்ளக்காதலன் குழந்தைக்கு செய்த கொடூரம்! பகீர் வீடியோ..!!!
கேரள மாநிலம் நெடுமங்காடு அருகே ஒன்றரை வயது குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆஷ்கர் என்பவரை சாட்சியம் சேகரிக்க போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து வந்தபோது பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி அவரை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. தற்போது இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடற்கூறாய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொடுமைகள்
பனவூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குழந்தையின் தாய் அகிலாவின் கள்ளக்காதலனான ஆஷ்கர், குழந்தை அர்ஷித்தை தொடர்ந்து தாக்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை உயிரிழந்த பிறகு, அகிலா தமிழ்நாட்டில் நடன நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த நேரத்தில் திடீரென வாந்தி மற்றும் இருமல் ஏற்பட்டதால் குழந்தை இறந்துவிட்டதாக ஆஷ்கர் கூறியுள்ளார்.
ஆனால் உடற்கூறாய்வு அறிக்கை பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியது. குழந்தையின் உடலில் பழைய மற்றும் புதிய காயங்கள் சேர்த்து மொத்தம் 51 சித்திரவதைக் காயங்கள் இருந்தன. மேலும், உள்ளங்கால்களில் ஆழமான தீக்காயங்களும் கண்டறியப்பட்டன.
இதையும் படிங்க: நம்பவே முடியல... மேடையில் பேசிக்கொண்டிருந்த 24 வயது இளம் பெண்! திடீரென சரிந்து விழுந்து மயங்கி.... அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி..!!
எலும்பு முறிவுக்கும் தாக்குதலே காரணம்
குழந்தை கீழே விழுந்ததால் கை உடைந்ததாக முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவ பரிசோதனையில், ஆஷ்கர் குழந்தையை மிதித்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. சாப்பிட்ட உடனேயே கடுமையாக தாக்கப்பட்டதால் வாந்தி ஏற்பட்டதுடன், அதுவே உயிரிழப்புக்கும் காரணமாக இருந்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குற்றத்தை மறைக்க முயன்ற ஆஷ்கரும் அகிலாவும் வீட்டின் உள்ளே இருந்த இரத்தக் கறைகளை சுத்தம் செய்ததுடன், குழந்தையின் ஆடைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை வீட்டின் பின்புறத்தில் எரித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாட்சியம் சேகரிக்க சென்றபோது பரபரப்பு
வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக சாட்சியம் சேகரிப்பு நடத்த போலீசார் ஆஷ்கரை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்தனர். அதற்கு முன்பாகவே அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
பின்னர் ஆஷ்கர் அங்கு அழைத்து வரப்பட்டபோது, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். போலீஸ் வளையத்தை உடைத்துக்கொண்டு சிலர் அவரை தாக்கியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் சிரமத்துக்கு மத்தியில் போலீசார் அவரை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
மேலும் நடந்த விசாரணையில், ஆஷ்கர் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது முதல் மனைவி அமினாவை வரதட்சணை பிரச்சினையில் கடுமையாக தாக்கியதாகவும், அதனால் அவர் ஓராண்டு காலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
SHOCKING! 1.5-yr-old Arshid tortured to death in Nedumangad, Keralam (May 29).
Autopsy: 51 injuries — genital wounds, cigarette burns, internal bleeding, old fractures.
Mother Akhila & partner Ashkar arrested for abuse.
Grandparents had raised alarms & sought custody earlier. pic.twitter.com/Dhzq5ZyfpI
— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 1, 2026
இதையும் படிங்க: நிமிஷத்துல இப்படியா நடக்கணும்! கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பறந்து போன பைக்குகள்! திக் திக் விபத்து வீடியோ!!!