போதை வெறி..! பாதையில் போன பாம்பை பிடித்து நறுக்கு நறுக்கு என கடித்து துண்டு துண்டாக துப்பிய இளைஞன்.! பார்ப்போரை பதற வைக்கும் வீடியோ.!
போதை வெறி..! பாதையில் போன பாம்பை பிடித்து நறுக்கு நறுக்கு என கடித்து துண்டு துண்டாக துப்பிய இளைஞன்.! பார்ப்போரை பதற வைக்கும் வீடியோ.!

கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முதல் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குமார் என்ற இளைஞர் ஒருவர் மதுக்கடைக்கு சென்று நன்கு குடித்துவிட்டு மது போதையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் பாம்பு ஒன்று குறிக்கிட்டுள்ளது.
பாம்பை பார்த்ததும் கோவமான குமார் சற்றும் அசராமல் அந்த பாம்பை கையில் எடுத்து துண்டு துண்டாக கடித்து, குதறி துப்பியுள்ளார். இந்த காட்சியை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.