லிப்ட் கொடுப்பது போல பெண்ணிடம் வழிப்பறி முயற்சி.. ஓடும் வாகனத்தில் கீழே குதித்து பெண் பரிதாப பலி.!

லிப்ட் கொடுப்பது போல பெண்ணிடம் வழிப்பறி முயற்சி.. ஓடும் வாகனத்தில் கீழே குதித்து பெண் பரிதாப பலி.!



karnataka-chikmagalur-woman-try-to-escape-robbery-attem

உதவி கேட்ட பெண்ணின் நகையை கயவன் கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில், தப்பிக்க முயன்ற பெண்மணி பலியான சோகம் நடந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் மாவட்டம், தரிகெரே பகுதியில் வசித்து வருபவர் ரூபா (வயது 25). இவர் மிர்லனேஹள்ளி சாலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ரூபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். 

சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமிரா இருந்த நிலையில், அதில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, வாலிபருடன் இருசக்கர வாகனத்தில் செல்கையில் ரூபா குதித்து படுகாயம் அடைந்து உயிரிழந்த காட்சிகள் இடம்பெற்றன. அந்த இருசக்கர வாகனம் குறித்து விசாரணை செய்தபோது, அது கோவிந்தா (வயது 27) என்பவருக்கு சொந்தமானது என்பது அம்பலமானது. 

karnataka

அவரிடம் நடந்த விசாரணையில், "ரூபா சம்பவத்தன்று மிரலேனஹள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் பேருந்திற்காக காத்திருந்த நிலையில், நீண்ட நேரம் பேருந்து வராததால் அவ்வழியே வந்த கோவிந்தவிடம் உதவி கேட்டுள்ளார். கோவிந்தாவும் லிப்ட் கொடுப்பது போல நடித்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவரின் நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். 

அப்போது, அவரிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்த ரூபா பரிதாபமாக பலியாகியுள்ளார். கோவிந்தா இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, கோவிந்தாவின் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.