தந்தை இறந்த மீளாத்துயரில் மகள்.. கல்லூரி மாணவியின் விபரீத முடிவால், கண்ணீரில் குடும்பம்.!

தந்தை இறந்த மீளாத்துயரில் மகள்.. கல்லூரி மாணவியின் விபரீத முடிவால், கண்ணீரில் குடும்பம்.!



Karnataka Chikmagalur College Student Spanthana Suicide

தந்தை இறந்த துக்கத்தில் இருந்த கல்லூரி மாணவி, ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பரிதாப நிகழ்வு நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் மாவட்டம் என்.ஆர் புரா, சவுதிகெரே கிராமத்தை சார்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு ஸ்பந்தனா (வயது 18) என்ற மகள் இருக்கிறார். இவர் என்.ஆர் புராவில் இருக்கும் கல்லூரியில் பி.ஏ முதல் வருடம் பயின்று வருகிறார். 

கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக மஞ்சுநாத் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் இருந்து வந்துள்ளனர். மேலும், தந்தை இறந்த துக்கம் தாளாது ஸ்பந்தனாவும் சோகத்தில் இருந்து வந்துள்ளார். 

karnataka

4 மாதங்கள் ஆகியும் தந்தையின் இறப்பில் இருந்து மீளாமல் இருந்த ஸ்பந்தனா, நேற்று முன்தினம் கல்லூரிக்கு வழக்கம்போல சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் தாய் மஞ்சுளா ஸ்பந்தனாவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை. 

தனது மகளின் நண்பர்களிடமும் தகவலை தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் ஸ்பந்தனா கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். மஞ்சுளாவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தாய் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

karnataka

இதற்குள்ளாக, மென்ஸூர் பத்ரா ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக தகவல் கிடைக்கவே, மஞ்சுளா அங்கு சென்று பார்த்தபோது மகள் ஸ்பந்தனா பிணமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி கதறி அளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் ஸ்பந்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த என்.ஆர் புரா காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஸ்பந்தனா தந்தை இறந்த துக்கத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.