ஒன்றரை வயது குழந்தை பலி; சூனியம் வைத்ததாக மூதாட்டி அடித்தே கொலை..!

ஒன்றரை வயது குழந்தை பலி; சூனியம் வைத்ததாக மூதாட்டி அடித்தே கொலை..!



Jharkhand Aged Women Killed 

 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குமளா மாவட்டம், சாதிரி கிராமத்தைச் சார்ந்த ஒன்றரை வயது சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. குழந்தை உடல்நலக்குறைவு ஏற்பட்ட சில நாட்களிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

இதே கிராமத்தில் சலாதேவி என்ற 58 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில், மூதாட்டி சிறுமிக்கு சூனியம் வைத்ததன் காரணமாகவே குழந்தை உயிரிழந்துவிட்டார் என குழந்தையின் உறவினர்கள் நினைத்துள்ளனர். 

Jharkhand

கடந்த சனிக்கிழமை இரவு 10:30 மணி அளவில் மூதாட்டியை குடும்பமாக சேர்ந்து தாக்கி இருக்கின்றனர். இதனால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.