ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!


JampK-Three-terrorists-killed-in-two-separate-encounters

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில்  லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தலைவர் உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குப்வாரா மாவட்டம் கனிபோரா கிரல்குண்ட் பகுதியில் உள்ள பழத்தோட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து ராணுவத்தினர் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர். பின் நடைப்பெற்ற நீண்ட நேர துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதேபோல் சோபியான் மாவட்டம் சித்ரகாம் கிராமத்தில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் அப்பகுதியில் சில பயங்கரவாதிகள்  பதுங்கியிருக்கலாம் என்பதால் தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.