ரூ.1000 கடனுக்காக பயங்கரம்... நண்பன் முகமது அலியை செங்கல்லால் அடித்தே கொன்ற காதர் பாஷா...!

ரூ.1000 கடனுக்காக பயங்கரம்... நண்பன் முகமது அலியை செங்கல்லால் அடித்தே கொன்ற காதர் பாஷா...!



indiaworker-beaten-to-death-for-a-loan-of-rs1000

ஆயிரம் ரூபாய் கடனுக்காக தன் நண்பனையே அடித்துக்கொன்ற கட்டிடதொழிலாளி கைது செய்யப்பட்டார்.
 
சிக்கமகளூரு சித்ரதுர்கா டவுன் கானபாவி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (30). இவருடைய நண்பர் காதர் பாஷா. இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதர் பாஷாவிடம் முகமது அலி ரூ.1000 கடன் வாங்கியிருந்தார்.

ஆனால் அந்த பணத்தை முகமது அலி திரும்ப கொடுக்கவில்லை. இதனால் தான் கொடுத்த  பணத்தை கேட்டு காதர் பாஷா தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காதர் பாஷா, முகமது அலியை செங்கல்லால் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த முகமது அலி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது இது குறித்த புகாரின் பேரில் சித்ரதுர்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, காதர் பாட்ஷாவை கைது செய்தனர். மேலும் மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.