அதிர்ச்சி! செங்கடலில் இந்திய கப்பலுக்கு நடந்த பயங்கரம்! வெடிபொருள்களை நிரப்பி தாக்குதல்.. 13 இந்தியர்களின் உயிர் ஊசலாடிய அந்த திக் திக் நிமிடங்கள்...!!!



india-condemns-red-sea-merchant-ship-attack-yemen

ஏமன் கடற்கரைக்கு அருகிலுள்ள செங்கடலில் இந்தியக் கொடி ஏந்திய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. தாக்குதலில் கப்பல் கடலில் மூழ்கிய நிலையில், அதில் இருந்த 13 இந்தியர்கள் மற்றும் ஒரு ஏமன் நாட்டவர் உட்பட 14 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

வெடிபொருட்கள் நிரம்பிய படகு மூலம் தாக்குதல்

தகவலின்படி, 'எம்.எஸ்.வி. ஃபைஸ் நூரே ஒலியா' என்ற வர்த்தகக் கப்பல் மீது வெடிபொருட்கள் நிரம்பிய படகு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கப்பல் கடலில் மூழ்கியது. சம்பவம் நடந்த உடனே ஏமன் கடலோரக் காவல்படையினர் விரைந்து செயல்பட்டு, கப்பலில் இருந்த அனைத்து மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க: பணத்துக்காக பாசத்தையே அடகு வைத்த தாய்! பெற்ற மகளையே ரூ.1.5 லட்சத்திற்கு விற்று….. பித்தலாட்டம் ஆடிய தாய்…! போலீஸ்ஸின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!!

இந்திய தூதரகம் தீவிர கண்காணிப்பு

ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், ஏமன் அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மீட்கப்பட்ட மாலுமிகள் அனைவருக்கும் மருத்துவ உதவி வழங்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை நிறுத்த இந்தியா வலியுறுத்தல்

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுக நகருக்கு அருகே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், இதற்கு ஹூதி அமைப்பே காரணம் என்று ஏமனின் தேசிய எதிர்ப்புப் படைகள் குற்றம்சாட்டியுள்ளன. சர்வதேச நீர்வழிகளில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வர்த்தகக் கப்பல்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சுதந்திரமான கடல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், மீட்புப் பணியில் விரைந்து உதவிய ஏமன் அதிகாரிகளுக்கு இந்தியா தனது நன்றியையும் தெரிவித்துள்ளது.

 

இதையும் படிங்க: கள்ளக்காதலால் கதிக்கலங்கிய குடும்பம்! மனைவியை கொடூரமாக தாக்கி.... 2 குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்த கணவன்! பகீர் சம்பவம்...!!!