முன்விரோதத்தால் பயங்கரம்; 3 பெண்கள் இரும்பு கம்பியால் அடித்தே கொலை.. 28 வயது இளைஞர் வெறிச்செயல்.!



in Kerala Ernakulam 3 Kills by Man 

 

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், சேந்தமங்கலம், வடக்கு பரவூர் பகுதியில் வசித்து வருபவர் ஜிதின். இவரின் மனைவி வினிஷா. இவரின் குடும்பத்தினர் வேணு, உஷா. இவர்களின் பக்கத்த்து வீட்டில் வசித்து வருபவர் ரிது (யது 28). 

இரண்டு குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் நடந்து, பின் இருதரப்பும் அமைதியாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இதையும் படிங்க: காட்டுக்குள் ஆடு மேய்க்கச் சென்று நடந்த சோகம்; பெண் யானை தாக்கி பலி.!

KERALA

3 பேர் கொடூர கொலை., ஒருவர் உயிர் ஊசல்

இதனிடையே, சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரிது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த வினிஷா, உஷா, வேணு ஆகியோரை இரும்பு கம்பியால் தலையில் அடித்துக்கொடுர கொலை செய்துள்ளார். 

மேலும், ஜிதின் படுகாயத்துடன் உயிருக்கு போராடி இருக்கிறார். டக்வல அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ருதுவை கைது செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அணையில் தவறி விழுந்து 3 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்; நீரில் மூழ்கி பரிதாப பலி.!