மெட்ரோ இரயில் முன்பாய்ந்து 19 வயது இளைஞர் தற்கொலை; பெங்களூரில் சோகம்.!

மெட்ரோ இரயில் முன்பாய்ந்து 19 வயது இளைஞர் தற்கொலை; பெங்களூரில் சோகம்.!



in-bangalore-youth-jumped-on-metro-train-died

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், மகடி - வைட்பீல்ட் மெட்ரோ வழித்தடத்தில், அட்டிகுப்பே இரயில் நிலையத்தில் இன்று மதியம் 02:10 மணியளவில் இளைஞர் ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து இளைஞரின் உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் துருவ் தாக்கர், தேசிய சட்டப் பள்ளி மாணவர் என்பது உறுதியாகி இருக்கிறது. 

அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்ற விபரம் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த தற்கொலை சம்பவத்தால் அவவழித்தடத்தில் சிலமணிநேரம் இரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.