மனைவி மீதுள்ள சந்தேகத்தால் தனது குடும்பத்தையே அழித்த கணவன்.. குழந்தைகளையும் விட்டுவைக்காத பரிதாபம்.!

மனைவி மீதுள்ள சந்தேகத்தால் தனது குடும்பத்தையே அழித்த கணவன்.. குழந்தைகளையும் விட்டுவைக்காத பரிதாபம்.!



husband-killed-his-own-family

வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக மனைவி மீது எழுந்த சந்தேகத்தால், தனது குழந்தைகளையும் சேர்த்து கணவர் மொத்த குடும்பத்தையே கொன்ற பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ஓதவ் பகுதியை சேர்ந்தவர் வினோத் ஜெய்க்வாட். இவருடைய மனைவி சோனால்பென் ஆவார். தம்பதிகளுக்கு 17 வயதுடைய கணேஷ் என்ற மகனும், 15 வயதுடைய பிரகதி என்ற மகளும் இருந்தனர். அத்துடன் பெண்ணின் பாட்டி சுபத்ராபென்னும் இவர்களுடன் ஓதவ் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சோனல்பென்னின் தாய், அகமதாபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் தனது மகளை தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும், அவரது வீடு வெளிப்பக்கமாக பூட்டி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று, சோனால்பென்னின் வீட்டின் பூட்டை உடைத்த போது, அங்கு கொலை செய்யப்பட்ட அழுகிய நிலையில் நான்கு பேரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

gujarat

இதனையடுத்து உடல்களை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வில் இவர்கள் நால்வரையும் சில நாட்களுக்கு முன்னர் கத்தியால் குத்திக் கொன்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அத்துடன் சோலார்பென்னின் கணவர் வினோத மட்டும் அங்கு தென்படாத நிலையில், கொலை குறித்த சந்தேகம் அவரின் பக்கம் திரும்பியது. இதன் காரணமாக வினோத் ஜெய்க்வாட்டின் செல்போன் சிக்னலை வைத்து அவரை போலீசார் பின் தொடர்ந்துள்ளனர்.

அப்போது மத்தியபிரதேசம் இந்தூரில் இருந்து குஜராத் திரும்பிக்கொண்டிருந்த வினோத்தை காவல்துறையினர் பேருந்தில் வைத்து கைது செய்தனர். பின் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தனது மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து சந்தேகத்தின் பேரில் அவரை கொலை செய்ததாகவும், பின் அந்த குற்றத்தை மறைப்பதற்காக தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியின் பாட்டியையும் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

குற்றவாளியே, குற்றத்தை ஒப்புக் கொண்ட காரணத்தால் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.