BREAKING: ஷாக் நியூஷ்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு!!!
கல்யாண வீட்டில் சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்த வாந்தி, மயக்கம்! 400-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நல குறைவு! அதிர்ச்சி வீடியோ..!!!
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விருந்து பெரிய சிக்கலாக மாறியுள்ளது. விருந்தில் கலந்து கொண்டு உணவு அருந்திய 400-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். தற்போது பலர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். அதிகாரிகள் இதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருந்துக்குப் பிறகு தொடங்கிய பாதிப்பு
தாஹோத் மாவட்டத்தின் அப்லோட் கிராமத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். விருந்து முடிந்து சில மணி நேரங்களிலேயே, பலருக்கு வாந்தி, குமட்டல், வயிற்று வலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதனால் கிராமத்தில் பதற்றம் நிலவியது.
அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ முகாம்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்ததால், தகவல் கிடைத்த உடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தீவிர பாதிப்பு உள்ளவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்களில் அனுப்பப்பட்டனர். லேசான பாதிப்புக்குள்ளானவர்களுக்கு கிராமத்திலேயே தற்காலிக மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
உணவு மாதிரிகள் ஆய்வு
மருத்துவர்களின் தகவலின்படி, தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்டது கவலை அளிக்கிறது. முதற்கட்டமாக இது Food Poisoning காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் உணவை சரியாக சேமிக்காதது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, உணவு நச்சுத்தன்மை சம்பவங்களை தவிர்க்க பொதுவிழாக்களில் உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பில் கூடுதல் கவனம் தேவை என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கிராமத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு தொடர்ந்து நிலையை கண்காணித்து வருகின்றனர்.
गुजरात में ज़हरीला खाना खाने से 400 से अधिक लोग बीमार
दरअसल, एक शादी समारोह में संदिग्ध खाद्य विषाक्तता के कारण 400 से अधिक लोग बीमार पड़ गए
कई लोगों को अस्पताल में भर्ती कराया गया, स्वास्थ्य अधिकारियों द्वारा जांच जारी है। pic.twitter.com/zvoFECs6to
— Priya singh (@priyarajputlive) April 21, 2026