திருமணம் முடிந்த கையுடன் கல்லூரி தேர்வு.. மணக்கோலத்தில் தேர்வெழுதிய மாணவி.!

திருமணம் முடிந்த கையுடன் கல்லூரி தேர்வு.. மணக்கோலத்தில் தேர்வெழுதிய மாணவி.!



girl-written-exam-after-marriage-in-karnataka

புதுமணப்பெண் ஒருவர் திருமணம் முடிந்த கையோடு பி.காம் தேர்வு எழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டம், லிங்கபுரா கிராமத்தில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா (வயது 19). இவர் பாண்டவபுராவில் உள்ள எஸ்.டி.ஜி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்து, நேற்று திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து நேற்று தான் அவருக்கு முதலாமாண்டு செமஸ்டர் தேர்வு தொடங்கிய நிலையில், ஐஸ்வர்யா திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுத செல்வதாக தனது கணவர் மற்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

karnataka

அதுபோல தாலி கட்டி முடிந்தவுடன் திருமண கோலத்திலேயே ஐஸ்வர்யா தனது கல்லூரிக்கு சென்று செமஸ்டர் தேர்வை நல்லபடியாக எழுதியுள்ளார். இதன் மூலம் திருமணம் என்றும் படிப்புக்கு தடையாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.