11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பாதிரியார் பேரதிர்ச்சி செயல்..!

11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பாதிரியார் பேரதிர்ச்சி செயல்..!


girl-raped-by-church-father-in-uththar-pradesh

தேவாலய பாதிரியார் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பேரதிர்ச்சி சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டம், சண்டிகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தேவாலயத்தில் வசித்து வருபவர் பாதிரியார் ஆல்பர்ட். இவர் அந்த தேவாலயத்திற்குள் சைக்கிள் ஓட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை வந்த 11 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக சர்ச்சுக்குள் கூட்டி சென்றுள்ளார். 

மேலும், தான் பாதிரியார் என்பதையே மறந்து, தன்னுடைய காம முகத்தை அந்த சிறுமியிடம் காட்டியுள்ளார். பாவமன்னிப்பு கேட்கும் சர்ச்சில் பரிதாபமாக 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, 'வெளியே கூறினால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

Rape

இதனால் சிறுமி உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் கேட்ட சிறுமியின் தாய் உடனடியாக காவல்துறையினரிடம் புகாரளித்ததையடுத்து, போலீசார் பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.