கணவரை விவாகரத்து செய்துவிட்டு, சகோதரருடன் இப்படியா? பெண் செய்த மோசமான செயலால் இறுதியில் நேர்ந்த விபரீதம்!!
கணவரை விவாகரத்து செய்துவிட்டு, சகோதரருடன் இப்படியா? பெண் செய்த மோசமான செயலால் இறுதியில் நேர்ந்த விபரீதம்!!
தெலுங்கானா மாநிலம் சந்தாநகரில் வசித்து வந்தவர் சீதாலட்சுமி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சீதாலஷ்மி வீட்டிற்கு அருகே அவருக்கு சகோதரர் முறை கொண்ட ரமணா ராவ் என்பவர் வசித்து வந்தார்.
மேலும் மது பழக்கத்திற்கு அடிமையான ரமணா, சீதாலட்சுமி உடன் நெருங்கி பழகியநிலையில் மது குடிக்கும் பழக்கத்தை சீதாலெட்சுமிக்கும் சொல்லிக் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் இணைந்து ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த ரமணா சீதாலட்சுமியின் வீட்டிற்கு சென்று அவரது செயினை கழற்றி தருமாறு கேட்டுள்ளார் இதற்கு சீதாலட்சுமி மறுத்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரமணா சீதாலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டது பின்று தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.
இந்நிலையில் நன்றாக இருந்த தனது சகோதரி சீதாலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறியது அவரது சகோதரர் சிவகுமார் என்பவர்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.பின்னர் போலீசார் ரமணாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்தான் தான் சீதாலட்சுமியை கொலை செய்தேன் என ஒத்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.