கல்லூரி வளாகத்தில் வெறித்தனம்! துடிதுடித்து கதறிய இளம் பேராசிரியை! வெளியான அதிர்ச்சி பின்னணி!
கல்லூரி வளாகத்தில் வெறித்தனம்! துடிதுடித்து கதறிய இளம் பேராசிரியை! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மகாராஷ்டிரா மாநிலம் வார்தா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தவர் அங்கிதா பிசுடே. 25 வயது நிறைந்த அவர் கடந்த வாரம் 7. 15 மணி அளவில் கல்லூரிக்குள் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் அங்கீதாவின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் இருந்த அனைவரும் தீயை அணைத்து அங்கிதாவை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் 40 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, விக்கி நாகர்லே என்ற 27 வயது இளைஞரை கைது செய்தனர். அங்கிதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இவர் அவரை காதலிப்பதாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் விக்கிக்கு திருமணமாகி ஏழு மாத குழந்தை உள்ள நிலையில் அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவர் அங்கிதாவை பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த அங்கிதா அவரை திட்டியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் பெட்ரோலை ஊற்றி சங்கீதாவை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அங்கிதா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதால் உடல் முழுவதும் செப்டிக் ஆகி விட்டதாலும், சுவாச கோளாறு ஏற்பட்டதாலும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.