வீட்டில் போட்ட டீ-யை குடித்த நான்கு பேர் மரணம்.. என்ன காரணம்? அதிர்ச்சி தகவல்..

வீட்டில் போட்ட டீ-யை குடித்த நான்கு பேர் மரணம்.. என்ன காரணம்? அதிர்ச்சி தகவல்..



Four dead after drinking tea in uttar pradesh

வீட்டில் தயார் செய்யப்பட்ட டீயை குடித்த குடும்பத்தினர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் நாக்லா கன்ஹாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவனாந்தன் (35) அவரின் மனைவி ரமாமூர்த்தி. இவர்களுக்கு ஷிவாங் குமார்(6), திவ்யான்ஷ்(5) என்னும் இரண்டு மகன்கள் இருந்தனர்.  பண்டிகை காலத்தையொட்டி சிவனாந்தனின் தந்தை ரவீந்திரன் (55) இவர்களைக் பார்க்க அவர்களது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவர்க்கும் ரமாமூர்த்தி டீ தயார் செய்து கொடுத்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் சோப்ரன் சிங் என்பவரும் அங்கு வரவே அவருக்கும் டீ கொடுத்துள்ளார். அனைவரும் டீ அருந்திய நிலையில், சில நிமிடங்களில் அனைவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தநிலையில், இரண்டு குழந்தைகள் மற்றும் ரமாமூர்த்தியின் மாமனார் என மூவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சிவனாந்தன்னும் உயிரிழந்தநிலையில், பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரவீந்திரன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீசார், டீ தயாரிக்கும்போது ராமமூர்த்தி தவறுதலாக பூச்சி மருந்தை டீ யில் கலந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.