முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் காலமானார்.! பிரதமர் மோடி இரங்கல்!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் காலமானார்.! பிரதமர் மோடி இரங்கல்!!



former-president-pratibha-patil-husband-passed-away

முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டிலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் உடல் நலக்குறைவால் இன்று காலமான நிலையில் அவருக்கு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத்.

89  வயது நிறைந்த அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் குடியரசு தலைவரின் கணவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கணவர் தேவிசிங் ஷெகாவத் மறைவால் வாடும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பல வழிகளில் சமூகத்திற்கு சேவை செய்து தனி முத்திரை பதித்தவர் என தெரிவித்துள்ளார்.