தனியாக நிற்கும் பெண்களை நோட்டமிட்டு இழுத்து வச்சி பச்சக்.. பச்சக்.. சீரியல் கிஸ்சர் பகீர் செயல்.!

தனியாக நிற்கும் பெண்களை நோட்டமிட்டு இழுத்து வச்சி பச்சக்.. பச்சக்.. சீரியல் கிஸ்சர் பகீர் செயல்.!


Forcefully kisses women and escapes serial kisser

பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் மாவட்டம், சதார் மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளராக பெண்மணி ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரை மர்மநபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10-ஆம் தேதி பெண்மணி மருத்துவமனையின் பின்பகுதியில் நின்றபோது, திடீரென அங்கு வந்த நபர் அவரை வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார். இது தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகிய நிலையில், அதை வைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்மணி சம்பவம் தொடர்பாக கூறுகையில், அவர் உயரம் குறைந்து காணப்பட்டார். குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து என்னை முத்தமிட்டு சென்றுவிட்டார். மருத்துவமனைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான விசாரணையில் குற்றவாளி சீரியலுக்கு கிஸ்சராக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகிய நிலையில், அவர் பெண்களை வலுக்கட்டாயமாக முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்துள்ளது.