ஓடும் ரயிலில் ரத்தம் சொட்ட இருக்கைக்காக நடந்த குடுமிப்பிடி சண்டை.! தடுக்க வந்த பெண் போலீசாருக்கு நேர்ந்த பரிதாபம்.! ஷாக் வீடியோ..

ஓடும் ரயிலில் ரத்தம் சொட்ட இருக்கைக்காக நடந்த குடுமிப்பிடி சண்டை.! தடுக்க வந்த பெண் போலீசாருக்கு நேர்ந்த பரிதாபம்.! ஷாக் வீடியோ..



fight-with-women-passengers-in-mumbai-electric-train

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக மும்பை திகழ்ந்து வருகிறது. அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்வோர் அனைவரும் பெருமளவில் மின்சார ரயில்களிலேயே பயணம் மேற்கொள்வர். அதனால் எப்பொழுதுமே மும்பை ரயில் நிலையத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

இந்த நிலையில் இன்று மும்பையில் தானே - பன்வெல் லோக்கல் மின்சார ரயிலில் இருக்கையை பிடிப்பதற்காக பெண் பயணிகளுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. பெண் பயணிகள் ஒருவருக்குக்கொருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு ரத்தம் சொட்ட ஆக்ரோஷமாக சத்தமிட்டு  மோதிக் கொண்டுள்ளனர்.

மேலும் சண்டையை தடுக்க வந்த பெண் காவலரையும் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், துர்பே ரயில் நிலையத்தில் இருக்கை  காலியான நிலையில் அதில் அமர்வதற்காக பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டைதான் அது என கூறியுள்ளனர். இந்த நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.