சைடிஸ் இல்லாததால் ஓரமா போன பாம்பை பிடித்து கடித்து தின்ற இளைஞர். வைரல் வீடியோ.

குடிபோதையில் பாம்பை வாயில் வைத்து சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம் – வைரலாகும் வீடியோ!
உத்திரபிரதேசம் மாநிலத்தின் பண்டா மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் அசோக் (வயது 35) என்பவர், அடிக்கடி மது குடிக்கும் பழக்கத்தில் சிக்கியவர்.
சம்பவத்தன்று, குடிபோதையில் சைடு டிஷ் இல்லாததால் வீட்டின் அருகே திரிந்த ஒரு பாம்பை பிடித்து அதை நேரடியாக வாயில் வைத்துக்கொண்டு கடித்து சாப்பிட்டார். அவர் அதை மென்று சில துண்டுகளை விழுங்கியதும், குடும்பத்தினர் அதனை கண்டு அதிர்ச்சியில் அலறியபடி ஓடி வந்து பார்த்தனர்.
இதையும் படிங்க: தனது 6 வயது மகளை கொடூரமாக கொன்று வீட்டில் மறைத்த தாய்! அதிரவைக்கும் காரணம்! மனதை உலுக்கும் பகீர் சம்பவம்!
உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார மையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவர் பாம்பை சாப்பிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதுடன், அந்த பாம்பு விஷமில்லாத வகையை சேர்ந்ததென்பதும் தெரியவந்தது.
அசோக் பாம்பை மென்று கொண்டிருந்தபோது, அவரது தாயார் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரது வாயிலிருந்து பாம்பை வெளியே இழுத்துள்ளார். இருந்தாலும், அவர் ஏற்கனவே இரண்டு துண்டுகளை விழுங்கியிருந்தார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பாம்பு விஷமில்லாததனால் மரண அபாயம் தவிர்க்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றிய வீடியோ, அசோக்கின் சோகமான தோற்றத்துடன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற வினோதமான நிகழ்வுகள், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரவுகின்றன.
बांदा-शराबी ने नशे में सांप को बनाया अपना निवाला, अखिलेश ने सांप के बच्चे को मुंह से निगला
परिजनों ने युवक को सीएचसी बबेरू पहुंचाया, डॉक्टर भी चौंके, युवक का इलाज शुरू किया, बबेरू कोतवाली क्षेत्र के हरदौली गांव का मामला#Banda pic.twitter.com/mMwk3u0vy7
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) July 16, 2025
இதையும் படிங்க: மரணித்த குழந்தை.. உயிருடன் பிறந்த அதிசயம்.. GH மருத்துவர்கள் அலட்சியம்.!