முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் உடல் உறுப்புக்கள் செயலிழந்து மரணம்... பதறவைக்கும் தகவல்.!

முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் உடல் உறுப்புக்கள் செயலிழந்து மரணம்... பதறவைக்கும் தகவல்.!



Delhi Private Television worker died after hair transplant surgery

 

திருமணத்திற்காக ஆசை ஆசையாய் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த நபர், ஒரே ஆண்டில் உடல் உறுப்புக்கள் செயலிழந்து மரணமடைந்தார்.

டெல்லியில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் அந்தர் ரஷீத் (வயது 30). இவர் திருமணத்திற்காக தலைமுடியை சரி அழகாக்கும் பொருட்டு, ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குணமாகாது, அழுகி இரத்தத்தில் கலந்துள்ளது. இதனால் இரத்தத்தில் நச்சு கலந்து உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்துள்ளது. 

இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ரஷீத்தின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர். 

delhi

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், ரஷீத் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபர்கள் யூடியூப் பார்த்து சுயமாக மருந்துகளை ஏற்றி குறைந்த செலவில் அவ்வாறு செய்கின்றனர்.

8 மணிநேரம் வரை சிறப்பு மருத்துவர்களால் மேற்கொள்ளவேண்டிய அறுவை சிகிச்சையை, அரைகுறையாக கற்றுத்தேர்ந்து இவ்வாறான மோசடியாளர்களின் செயல் உயிரிழப்பை ஏற்படுத்திவுகிறது" என கூறுகின்றனர்.