சிறுமியை 20 முறை குத்திக்கொலை செய்த காதலன்; உணர்ச்சிவேசத்தால் நடந்த பயங்கரம் - டெல்லி காவல் அதிகாரி தகவல்.!

சிறுமியை 20 முறை குத்திக்கொலை செய்த காதலன்; உணர்ச்சிவேசத்தால் நடந்த பயங்கரம் - டெல்லி காவல் அதிகாரி தகவல்.!



Delhi 16 years old girl killed by her lover

புதுடெல்லியில் உள்ள ஷாஹ்பாத் டைரி, ஜெ.ஜெ காலனியில் வசித்து வந்த 16 வயது சிறுமி, தனது 20 வயது காதலன் சாஹில் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். 

சுமார் 20 முறை கத்தியால் குத்தி, பலமுறை அவரின் உடலை சிதைக்கும் நோக்கத்துடன் பெரிய சிமெண்ட் கல்லை தூக்கி உடலின் மீது போட்டு கொடூர கொலை நடந்தது.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் சாஹில், தனது உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் முன்பு உத்திரபிரதேசம் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளி குறித்து கருத்து தெரிவித்த டெல்லி காவல் அதிகாரி தீபேந்திர பதக், "இது உணர்ச்சிவேசத்தால் நடந்த குற்றம். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது" என தெரிவித்தார்.