தனது செல்லமகளை உயிருக்குயிராக வளர்த்த தந்தை.! திட்டம் தீட்டி கொலை செய்த மகள்!! இதற்காகவா எல்லாம்..

தனது செல்லமகளை உயிருக்குயிராக வளர்த்த தந்தை.! திட்டம் தீட்டி கொலை செய்த மகள்!! இதற்காகவா எல்லாம்..



daughter-killed-father-with-lover

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே இலவம்திட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் சஜீவ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். இந்நிலையில் சஜீவ் தனது மகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வந்துள்ளார். மேலும் அவர் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மிகவும் பாசத்துடன் பார்த்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு கல்லூரிக்கு தனியார் பேருந்தில் சென்று வந்தபோது அப்பேருந்தின் டிரைவர் உடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. மேலும் இவர்களது காதல் விவகாரம் அவரது தாய்க்கு தெரியவந்த நிலையில், அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். மேலும் அந்தப் பெண் தனது காதலை கைவிடாத நிலையில் தாய் இது குறித்து சஜீவிடம் தெரிவித்துள்ளார்.

Murder

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சஜீவ் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்து தனது மகளுக்கு பாசமாக அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அதனை கேட்காத அப்பெண் வீட்டில் இருந்த நகை மற்றும் பணங்களை எடுத்துக் கொண்டு அந்த டிரைவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து சஜீவ் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் போலீசார் தீவிர தேடுதலுக்கு பிறகு அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அந்த பெண் தாங்கள் மேஜர் என்பதால் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் எங்களை சேர்ந்து வாழ விடுங்கள் என்று கூறியுள்ளார்.

Murder

 அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை விடுவித்த நிலையில் தனது மகள் இவ்வாறு செய்து விட்டாரே என ஆத்திரத்தில் சஜீவ் அடிக்கடி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் கோபம் அடைந்த சஜீவின் மகள், காதலன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சஜீவின் வீட்டிற்கு சென்று அவரை அடித்து தாக்கியுள்ளனர். அப்பொழுது சஜீவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில்  போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.